பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் அண்ணாமலை

(அண்ணாமலைப் பல்கலைக் கழக வைரவிழா

மலருக்காக)

ஈட்டுவதும் கூட்டுவதும் ஈட்டியதை

வகுப்பதுவும் இயல்பாற் செய்து காட்டியஅண் ணாமலைமன் கருணையொடு

வாழ்ந்திருந்த கால மெல்லாம் வேட்டெழுந்து தமிழ்மொழிக்கும் விளைபயனாம்

கல்விக்கும் வேண்டும் மட்டும் நீட்டியதை நாடறியும் நிறைபுலவோர்

ஏடறியும் நெஞ்சும் சொல்லும்

நெருஞ்சிபடர் வேட்களத்தை நிலமாக்கி,

நகராக்கி, நிலைத்து நிற்க அருங்கலைகள் பலகெழுமும் கழகமென ஒருகோவில் ஆக்கி வைத்து வரும்பொருளை அதுவளர வகுத்தளித்த

கையானை வைய மெல்லாம் தரும்புகழாற் பொலிவானை தனியண்ணா

மலையானைத் தலைக்கொள் வோமே.