பக்கம்:மனிதர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎壶 ஒரு சமயம் ஒரு பந்தயத்துக்காக இரவு நேரம் முழு வதையும் சுடுகாட்டிலேயே கழித்தான் அவன். இந்தச் சாதனையை அவன் பெருமையாகச் சொல்வது வழக்கம். அப்பேர்ப்பட்ட காத்தமுத்து திடீரென்று ஒரு காலகட்டத் தில் அடியோடு மாறிப் போனான். ராத்திரி நேரத்தில் வீட்டுக்குள் தனியாகப் படுத்து உறங்க அஞ்சினான். தடால் என்று ஏதாவது ஒசை கேட்டால் அவன் திடுக்கிட்டு விழிப் பான். ஒருவிதமான பதறலுடன், கலவரமாய் அங்குமிங்கும் பார்ப்பான். ஒரு மிரட்சி அவன் கண்களில் குடிபுகும். அறைக்குள் தூங்குகிற போது ஏதோ கெட்ட கனவு கண்டு பதறியவன் போல் திடீரென அவன் அலறுவான். உடல் எங்கும் வேர்வை பொங்க, பயந்தடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, திருதிருவென்று விழிப்பான். வெகு நேரம் அவன் தேகம் நடுங்கிக் கொண்டிருக்கும். உள் பயம் அவனை அப்படி ஆட்டி வைத்தது. பாழடைந்த வீட்டினுள்ளும். காட்டு வழிச் சந்து களிலும், பேய் வசிப்பதாகச் சொல்லப்பட்ட இருள் மண்டிய கட்டிடங்களிலும் படுத்து நிம்மதியாகத் துரங்கியவன்தான் அவன். அப்படிப்பட்ட காத்தமுத்துவிடம் இப்படி ஒரு மாறுதல் விளைந்தது எதனால்? இது பலரைக் குழப்பிய ஒரு விஷயம், காத்தமுத்துவுக்கு ஒருநாள் ராத்திரி ஏற்பட்ட அதிர்ச்சி தான் இதற்குக் காரணம் ஆகும். - அகன் வீட்டினுள் அயர்ந்து துரங்கிக் கொண்டிருந் தான். வீட்டின் மேல்தளத்திலிருந்து ஒரு பெரிய கட்டி பெயர்ந்து கீழே விழுந்தது. தடால் எனப் பெரும் ஒசை எழுந்தது. அது அக்கம் பக்கத்திலும் பல வீடுகளுக்குக் கேட்டது. - காத்தமுத்துவின் தல்ைமாட்டிலேதான் அந்தக் காரைக் க.டி விழுந்தது. ஒரு சாண் தள்ளி, செங்கல்லும் சுண் ண ம்பும் கொண்ட அந்தப் பெரிய கட்டி விழுந்திருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/56&oldid=855578" இலிருந்து மீள்விக்கப்பட்டது