பக்கம்:மனிதர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密器 அந்த உண்மை- சீதை தனது துணைவியாக வந்தால் தான் வாழ்க்கை இனிமை மிகுந்த மலர்ச் சோலையாக அமையும் என்கிற ஞானம்- மகிழ்வண்ணநாதனுக்குப் பிடிபடுவதற்கே வெகு காலம் ஆயிற்றே! மற்றவர்களுக்கு அது முதலிலேயே விளங்காமல் போனது அதிசயமில்லை தான. மகிழ்வண்ணநாதனுக்கு அத்தைமகள் சீதையிடம் சின்னஞ் சிறு பிராயம் முதலே அன்பும் ஆசையும் இருந்த தாகச் சொல்ல முடியாது. சீதை சூரியன் குஞ்சாகப் பிறக்க கவுமில்லை; சந்திரன் குஞ்சாக வளரவுமில்லை. மூதேவி! மூஞ்சியைப் பாரு! பனங்காய் மோரை!” என்றெல்லாம் அவனே பலமுறை பழித்திருக்கிறான். அத்தை மகள் என்ற உரிமையோடும், ஒருவித இளக்காரத்தோடும், அலட்சிய மாக மதித்துக் கேலி பேசி அவளை அழ அழ வைத்திருக் கிறான். அந்தப் பெண்ணும் ஏச்சுக்கு ஏச்சும், பேச்சுக்குப் பேச்சும், சில சமயம் அடியும் கிள்ளும் கொடுப்பதற்கு தயங்கியது இல்லை. அப்போது அவளிடம் அவனுக்கு ஆசையுமில்லை; நேசமும் இல்லை. பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக்கொண்டு திண்ணைக்கும் மண்ணுக்கும் தாவியவாறே, குரங்கே, குரங்கே குற்றாலத்துக் குரங்கே கொம்பை விட்டு இறங் கேன்’ என்று கத்திக்கொண்டு, தோழிகளோடு குதியாட்டம் போட்ட போதெல்லாம், அவன் பார்வையில் அவளும் ஒரு குரங்காகத்தான் தோன்றினாள். கண்ணாம் பூச்சியும், ஓடிப்பிடித்தலும் ஆடிக்களித்த அத்தை மகள் அவன் கண் களுக்குக் கொடியாகவோ மயிலாகவோ காட்சி அளித்தது இகிலைதான். பச்சைப் பசிய வயலில் தலையெடுத்துக் காற்றிலே தலழ்ந்தாடும் மூப்பன் கதிர் மாதிரி. பருவம் அடைய வேண்டிய பிராயத்தில் சீதையும் தள தளவென்று வளமும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்தாள். பதின்மூன்று-பதினான்கு வயசுப் பாவாடை தாவணிப் பருவத்துக் குட்டிவாலிபனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/65&oldid=855599" இலிருந்து மீள்விக்கப்பட்டது