பக்கம்:மனிதர்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பொதுவாக நல்ல மனுசன்தான்; மனித உள்ளம் பெற்றவர் தான். பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்தார், ஆயினும், சீதை படுத்த படுக்கையிலேயே கிடக்க வேண்டிய வளாகவும், மகிழம் நொண்டியாகவும் மாறுவதை எந்த வைத்தியமும் தடுத்து நிறுத்த இயலவில்லை. பாவம் இரண்டு பேரையும் இஷ்டம்போல் வாழ விட் டிருக்கலாம் என்று பிள்ளை அவர்களின் மனச் சாட்சி உறுத்தத்தான் செய்தது. அதை மறைப்பதற்காக அவர் உறுமுவதை மேற்கொண்டார். என்ன காதலோ! என்ன சாதலோ மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற விதத்தில் வாழவும் முடிவ தில்லை. வாழத்தான் முடிவதில்லை, செத்துப்போகலாம் என்று ஆசைப்பட்டால் அது எப்படி சாத்தியமாகும்? தங்க ளுக்கும் தொல்லை; இருப்பவர்களுக்கும் தொல்லைதான்!” நிரந்தர நோயாளிகள் இரண்டு பேரை வைத்துக் காப் பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலை மீது சுமந்து விட்டதனால்தான், மாறி ஆடும் பெருமாள் பிள்ளை சிடு சிடுக்கும் அண்ணாவியாகி விட்டார் என்று சிலர் சொல்வது வழக்கம். அந்தச் சுமையை அவரிடம் தள்ளி விட்ட காதல் ...காதல் போயின் சாதல்’ என்கிற விதி அவரைப் பித்தராய் -பேயராய் மாற்றுவதும் இயல்பாயிற்று. அவர் கோபம் கொள்வதில் நியாயமில்லை என்று தள்ள முடியுமா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/72&oldid=855607" இலிருந்து மீள்விக்கப்பட்டது