பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

51



அத்தகைய இடங்களாக, உணர்வு மிகுந்த எட்டு இடங்களைப் பெரியோர்கள் குறித்திருக்கின்றார்கள். முதல் தரமான உணர்விடங்களாக உதடுகள் (உதடுகள் என்றாலே முத்தம் என்று பொருள் தருகிறது பிங்கள நிகண்டு). கொங்கைகள்; பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள உள்பகுதிகள், மேற்கூறிய நான்கு இடங்களும் திரவங்களை உண்டுபண்ணுகின்ற (Anal Region) இடங்களாகும்.

மற்ற நான்கு இடங்களும் முடி, முளைத்திருக்கின்ற பகுதிகளாகும். தாழ்வாய், கன்னம், அக்குள் (Arm Pit) மற்றும் பிறப்புஉறுப்பின் வெளிப்பகுதிகள்.

மேற்கூறிய எட்டு இடங்களிலும், உடல் உறவு பற்றிய உணர்வுகள் நிறையாகவே நிறைந்து கிடக்கின்றன. மேலும், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், விரல்கள், விரல் நுனிகள், முன்பாத விரல்கள், முழங்கால்கள் முழங்கைப் பகுதிகள் அத்துடன் காதுபகுதிகளும், சற்று காதல் வேக உணர்வை எழுப்பும் இரண்டாந்தர பகுதிகளாகும்.

இடங்களைத் தெரிந்து கொண்டது போலவே அவைகளைப் பயன்படுத்தும் தடங்களையும், விதங்களையும் புரிந்து கொள்வது நலம்.

உதடுகளில் முத் தமிட் டும் , கன்னங்களை வேதனையெழாமல் கடித்தும் கிள்ளியும் கொங்கைகளை நசுக்குவது போல் பிசைந்தும் இன்பம்பெறச் செய்ய வேண்டும். இன்பம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிச் சென்றிருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

இவ்வாறு உடலுறவு கொள்வதற்கு, ஒவ்வொரு சிறை தொடங்குவதற்குமுன், வெளிப்படையாக இப்புற சிளையாட்டுக்களில் ஈடுபட்டு விளையாடிவிட்டுத்தான், உள்

5) 2 רח-o ~~ _*- wo- ی