26
26
பா. நீங்கள் வேண்டுமென்றால் எதையாவது எண்ணிக் கொள்ளுங்கள். நான் அம்மாதிரியாக ஒன்றையும் எண்ணிக்கொள்ள மாட்டேன். உங்கள் சம்பளத்தில் பாதி எனக்குக் கொடுத்தால்-மற்ற பாதி எங்கே போகிறது ?
தா. அதை நான் என் . செ ல வு க் கா க வைத்துக் கொள்கிறேன்.
பா. உங்கள் செலவுக்காக போதும் இந்த ம னை யை ஆளுவதென்றால் ஒருவர் ஆள வேண்டுமேயொழிய இரண்டு பெயர் ஆளமுடியாது!
பா. நிச்சயமாய் -இது என்ன மடத்தனம் !
மணி வருகிறான்.
தா. யார் அது ?
ம. பரமானந்தபவன் ஹோட்டலிலிருந்து வ ந் தி ரு க் கி றேன், எங்கள் எசமான் கோபால்ராவ் என்னை அனுப்பினார்.
(பார்வதியும் சகுந்தலாவும் அசட்டு முகத்துடன் கலவரப்பட ஆரம்பிக்கிறார்கள்)
தா. எதற்காக ?
ம. புரொபசர் (Professor) தாமோதர சாஸ்திரியார் இந்த வீட்டில் குடியிருக்கிறாராமே ?
தா. இருக்கிறார் -ஒரு விதத்தில், அவரிடம் உனக்கென்ன அலுவல் ?
ம.அவர் எங்களுக்கு பதினெட்டு ரூபாய் எட்டணா பாக்கி கொடுக்க வேணும், அதை வாங்கிவர எனக்கு உத்தர வாயிருக்கிறது. (பார்வதியும் சகுந்தலாவும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்)
தா. என்ன அறிவின்மை நான் உங்கள் ஹோட்டலுக்கு வந்ததுமில்லை, அங்கு ஒன்றும் சாப்பிட்டது மில்லையே.