காட்சி-1) மனோஹரன் 9
அநுபல்லவி
வானோர் புகழும் மானாபரணன்
தானவரேத்தும் தன்னிகரில்லாணை (நர)
சரணம் நீர்பெற்றதே பிள்ளை பாக்கியம்
யார்பெறுவார் மற்றிந்த சிலாக்கியம் பேர்பெற்ற அதிவீரன் பின்னறியாச்சூரன்
பீடுற்ற வீராதி வீரனை (தா)
தாம் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். அதுவுமன்றி ராஜப் பிரியனுமுடன் போயிருக்கிறான். அவன் வெளிக்கு எந் நேரமும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு பயந்தவன் போல் நடித்தபோதிலும், உண்மையில் சுத்தவீரனென்று நினையும் அவனை: ஆபத்துவேளையில் தன் ஆன்மாவைக் கொடுத்து இக்கட்ட்ையகற்றும் ஆப்தனென்று நினையும் அன்றியும் மனோஹரருக்கு ஒரு துணையும் வேண்டுமோ?
ஒரு தோழி வருகிறாள்.
தோ ஐயா, தம்மை மஹாராஜா அழைத்துவரச் சொன்னார்.
சத் :
பத் :
பத் :
என்னையா? இப்பொழுதேன் எ ன் னை அழைக்க வேண்டும்? இதோ வருகிறேன். அம்மணி, இதோசென்று என்னவென்று விசாரித்து வருகிறேன். |போகிறார்.1
இப்படிப்பட்ட மந்திரி ஒருவரிருப்பதினாற்றான் நமது பிரஜைகள் மஹாராஜவுக்குக் கீழ்ப்படிந்து சுகமாய் வாழ்ந்துவருகிறார்கள். அதிருக்கட்டும், விஜயா, நீ கருத் தரித்திருக்கிறதை ஏன் என்னிடம் இதுவரையிலும் கூற வில்லை?
மாமி எனக்கு வெட்கமாயிருந்தது.
கண்ணே, வாயிப்படி வெட்கமென்ன என்னிடம் கூற? வள் நாம் உள்ளே போவோம். (இருவரும் போகிறார்கள்.)