|அங்கம்-1) மனோஹரன் 25
விக:
வினை:
affs:
ஆர் :
gjఙ}63 :
ప#63}ఢif:
உயிரா? ஐயோ பாவம்:
இல்லை, ஐயா, நோய் போய்விட்டது.
வாஸ்தவந்தான். நோய்போய்விட்டது, அத்தோடே அவரும் போய்விட்டார், தாங்களென்ன கால் மாடோ, தலை மாடோ?
பேசாமலிருமையா! ~அம்மா, எப்படியாவது தாங்கள் அனுக்கிரகிக்க வேண்டும்.--
நீலவேனி, அதற்கென்ன? அப்படியே ஆகட்டும், நான் சொன்னபடிசெய்யாமற்போவேனோ?(அமிர்தகேசரிக்கு) ஐயா உம்மை இளவரசருக்கு வைத்தியராக நியமித் தேன். இன்று முதல் ஆரம்பித்து சீக்கிரம் இவனது வியாதியைத் தீர்க்கவேண்டும். உம்முடைய பெய ரென்ன?
அமிர்தகேசரி.
அமிர்தவேசரி:
இல்லை, ஐயா, பரிகாசம் பண்ணாதீர், அமிர்தகேசரி. மன்னிப்பு: நான் சொன்னது தப்புதான், இது வேசரி:
பேசாமலிருக்கமாட்டாய் நீ? வா உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன்! வசந்தா, இதோ இருக்கிற அமிர்தகேசரி சொற்படி நீ நடந்துவரவேண்டும். இல்லா விட்டால் உன்னை நான் தண்டிப்பேன். விகடா, வசந்தன் அமிர்தகேசரி சொற்படி நடக்கும்படி செய்ய வேண்டும் நீ. அவர்களிருவரும் சச்சரவிட்டுக்கொண் டால் உன்னை அரண்மனையினின்றும் நீக்கிவிடுவேன்.
அம்மணி! இது நல்ல வேலெயாயிருக்குதே! இவங்க
சண்டெ போட்டுக்குனா எனக்கு தண்டனெயா? அம் மணி, இந்த வேலெ எனக்கு வாணாம், வாணாம்!
விகடா, அப்படியல்ல. அவர்கள் சமாதானமாயிருக்கும் படி செய். வசந்தன் வியாதி நீங்கினால் உனக்கு நல்ல பரிசளிக்கிறேன்.