மனோஹரன் |அங்கம்-1)
அம்மணி, உங்களைக் கேட்க மறந்தேன்! நானனுப்பிய
சிம்மாசனம் வந்து சேர்ந்தா ?
சேர்ந்தது,-மஹாராஜாவின் அரண்மனையிலிருக்கிறது. அங்குப் போவானேன்? இங்கனுப்பினேனே?
எங்கிருந்தாலென்ன? அதை எப்படியாவது மீட்கவேண்டு மென்னும் எனது கோரிக்கை நிறைவேறிவிட்டது, அவ் வளவுதானே? நமக்கு வேண்டியது?
அம்மணி, நாங்கள் விடை பெற்றுக்கொள்ளுகிருேம்: சைனியங்களிறங்கியிருக்குமிடம் சென்று நாளைத்தினம் காலை மஹாராஜாவின் கொலுவிற்கு அப்படியே போகவேண்டியிருக்கிறது.--விஜயா, நான் வருகிறேன். ராஜப்பிரியா, வா போவோம்; நெடு நேரமாய்விட்டது.
சுகமாய்ப் போய்வாருங்கள், ஜாக்கிரதை.
(மனோஹரன், சத்தியசீலர் ராஜப்பிரியன் போகிறார்கள்)
அம்மட்டும் மனோஹரனிடமிருந்து இவ்வுறுதிமொழி இன்று பெற்றோமே! இல்லாவிட்டால், அவனுக்கிருக்கிற துடிப்பில் கோபம் வந்தால் இன்னது செய்வான் இன்னது செய்யமாட்டான் என்பது நிச்சயமிலலை-விஜயா, வா நாம் உள்ளே செல்வோம். பொழுது போயது.
iபோகிறார்கள்.)
காட்சி முடிகிறது.