frr:
trrr :
மனோஹரன் (அங்கம்-21
ராஜப்பிரியன் ஒரு புறமாக வருகிறான்.
சபாஷ் சபாஷ்! இவர்தான் சுத்தவீரர்! சொன்னால் வெட்கக்கேடு: யாவராலும் பிடிபடாத சுத்த வீரதீர னெனப் பெயர் வைத்துக்கொண்டு ஒருவனிதையின் கரத்திலுள்ள பூ மாலையாம் கட்டுண்டிரே!-அடடா! இவர் எங்கிருந்து புறப்பட்டார்! மறைவிடத்திலிருந்து வசந்தன் வெளியே வருகிறான்.
ஆஹா, சந்தேகமேயில்லை.
வசந்தா!
சந்தேகமேயில்லை. ஏனையா எம்முதுவுமேலே உக்கார் துக்கினு இருந்திங்கோ?
நான் எங்கே உட்கார்ந்துகொண்டிருந்தேன் ?
பின்னெ ஏன் முதுவு நோவுது ?
நல்ல நியாயமான கேள்வி, பின்பேன் அவர் முதுகு நோகுது; முகுது வளைந்துபோய் விட்டாற்போவிருக் கிறதே. ஐஐயோ!
வசந்தா! என்ன சமாசாரம்? எங்கிருந்தாய் இத்தனை நேரம் ?
நீங்க எங்கே உக்காந்திக்கினு இருந்திங்க?
இதோ இக் கல்லாசனத் தின்மீது உட்கார்ந்தேன்.
சரிதான்! சந்தேகமில்லை. நானு அதுங்கீழே உக்காத்
துக்கினு இருந்தேன். அதுதான் முதுவு நோவுது ஐயையோ! முதுவு வ .ெ ள ஞ் சி போனாப்போலே
இருக்குதே!
நல்ல நியாயம், சந்தேகமில்லை. ஐயா, அதிருக்கட்டும். இதன் கீழே ஏன் ஒளிந்திருந்தீர்கள் ? கேக்கமாட்டைங்கோ பின்னே! அதோ அந்த குளத் தண்டே விளையாடரபொண்ணுங்கல்லாம், தண்ணி யாலேயும் பூவாலேயும் என்னெ அடிச்சாபோலே உங்