70 மனோஹரன் (அங்கம்*
(அமிர்தகேசரியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள அமிர்த்கேசரி அவனை மெல்ல அழைத்துச் செல்கிறான்.)
வனை (ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு) எனக்கின்னது செய்கிறதென்று தோன்றவில்லை. ஒரு புறம். உடனே மஹாராஜாவைப் போய் ப் பார்க்கலாமாவென்று தோற்றுகிறது: ஒரு புறம் பார்க்கலாகாது என்ற் தோற்றுகிறது. இப்பொழுது பார்த்தால் ஒருவேளை என்னைக் கண்டதும் கோப்ம் முன்னிலும் அதிகரிக்குமோ என்னவோ? பாராவிட்டாலோ, அப்படியே இவரது மனம் திரும்பாது நிலைத்துவிட்டால் என் செய்வது?
நீலவேணி வருகிறாள்:
நீ அம்மா, உம்மை அந்தப்புரமெங்கும் தேடியலைந்துவிட்
டல்லவோ வந்தேன்.
வனை என்னவோ முக்கியசமாசாரமிருக்கவேண்டும்!-என்ன
சிக்ரம் சொல்.
虏; பத்மாவதி மஹாராஜாவுக்கு ஒரு நிருபம் எழுதியிருக்கி
றிார்க்ள்.
வனை: பத்மாவதியா? எங்கே அது மஹாராஜாவிட்ம் போய்ச்
சேர்ந்துவிட்டதா அது ?
நீ இல்லை, என்னிடத்தில்தானிருக்கிறது.
வனை கொடு இட்படி கொடு இப்படி!
நீ : கொடுத்தால் என்ன தருகிறீர்கள் எனக்கு ?
வனை என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன், கொடு இப்படி
. (திருபத்தை வாங்கிப் பிரித்து வாசிக்கிறாள்.) 'பிராணநாதா நான் ஏன் தங்களைப் பிராணநாதா என்று அழைக்கலாகாது? எது எப்படியிருந்தபோதிலும் தாம் எனது பிராணநாதர் என்பதை நான் எனது யிருள்ளளவும் மறவேன். பிராணநாதா! த ா ன் எவ்வளவு துயரந்தான் பொறுப்பேன்? நான் பொறுத்த தெல்லாம் போதாதோ? தமக்குப்பிறந்த குமாரனை ஒருத்தி வேசி மகனென்று கூறத்தாம் சும்மா கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமா? இப்பழிச்சொல் தம்மையும்