பக்கம்:மனோன்மணீயம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மனோன்மணியம் 2-ஆம் சேவ : நாரா யணரே நன்மதி உடையோர். 4-ஆம் சேவ : 15. பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம்' இன்றியாம் பிழைத்ததிங் கிவரால் அன்றே... (ஜீவகன் எழுந்து நடக்க1 3-ஆம் சேவ : அரசன் அஃதோ எழுந்தான் காணிர். முதற்சேவ : உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி ! ஜீவகன் : 20. கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன். நாணம் விடுத்துயிர் இன்னும் வீனில் தரித்தேன். ஆ1 ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் கொல்குலம் பட்டாபா டின்று மற் 25. றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே : மாசறு மணியே! அழியாப் பழிப்பு:னக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த 30. முன்னோர் தம்முள் ஒன்னார்க் கிரிந்து" மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ: யாதினிச் செய்குவன் ! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி பற்கடித்து) போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35. கார் முகம் என்செய! கடிவாள் என்செய! (வில்லும் வாளும் எறிந்து) ஒ! ஒ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) 1. துணிவுச் செயல் 2. பின்வாங்கி 3. வில்

    • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/152&oldid=856179" இலிருந்து மீள்விக்கப்பட்டது