156 135. 140. 145. в тунг I (தனதுள்) 150. குடில : 155. மனோன்மணியம் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல் உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும் பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன் ஐயோ!' வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (பலதேவனைக் காட்டி: படுமா றில்லாப் பாவியேன் எங்ங்னம் நோக்குவன் நின்முகம்? காக்குதி 1 ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில: நீயே போக்குதி! காக்குதி! இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடை ஊன்றிடில் உய்வன். அன்றேல்... (அழுதும் உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே ! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? போரிடை உளதன் றியார் செய் தனர்.பின்? உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை. (நாராயணன் போக; சித்தமற் றல்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா யாதுமொன் றெனக்கா இரந்திலன் உணர்வை ஒதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு) அப் போதலோ காண்குவரின் மன்னுல குள்ளார் என்னுள நிலைமை!
பக்கம்:மனோன்மணீயம்.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை