186 மனோன்மணியம் (ஜீவகனை நோக்கி) - உறுவதங் கென்னென உணர்ந்தனை? ஜீவ : உணர்ந்திலேன்: குடில : அதுவே கற்படை அடைந்துளேன் பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன், முனிவர் ஒதிய திதுவே. 240. இவ் வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நம்மையெல்லாம் புத்தியற் றவரென நொந்து தாம் உழைத்ததை நோக்கிடில் நகைப்பே: ஜவ : நந்தொழில் பழித்தலே சிந்தை யெப்பொழுதும்! 245. பண்டே கண்டுளோம். பாங்கோ’ அனுப்புதல்? குடில பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லுவர் யாரே? அணையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். 250. உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென்? கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஒதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255. தேனார் தெரியல் சூடு முன் இரவில் தனி வழி யநியர் பால் தங்குதல்...? ஜீவ ! தவறே. குடில : முனிவரே ஆயினும். அநியரே உலகம் பைத்தியம்: பழித்திடும்; சத்தியம் உணராது, ஜீவ : மெய்ம்மை, வதுவைமுன் விதியன் றனுப்புதல். 260. அனுப்பினும் அதனால் ஆம் பயன் என்னே? மனத்துள் கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். ஜீவ . அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? - குடில : = மன்னவ. 1. புத்தி 2. முறையோ?
பக்கம்:மனோன்மணீயம்.pdf/188
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை