பக்கம்:மனோன்மணீயம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்செய் நாட்டின் வளம் 251 பயிராகிய மயிர் சிலிர்த்துப் பல்வகை வளங்களையும் பாங்குறத் தந்து பரவசப்படுவாள். இவ்வாறு நன்செய் நாட்டினைக் குடிலன் வருணிக்கும் கூற்றில், அந்நாட்டின் மழை வளமும், ஆற்று வளமும், நில வளமும், நெய்தல் வளமும், நீர் வளமும், உழவு வளமும் முதலான சிறப்புக்கள் அனைத்தினையும் ஒருங்கே கண்டு மகிழலாம். இயற்கையின் இனிய பெற்றி இதனால் இனிமை அடன் விளக்கமுறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/253&oldid=856399" இலிருந்து மீள்விக்கப்பட்டது