பக்கம்:மனோன்மணீயம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் நான்காம் களம் இடம் : கன்னிமாடம் காலம் : மாலை (மனோன்மணி சயனித்திருக்க, ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன் : உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாதென்? விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினும் கொணர்வன்; 5. வருத்துவ தென்னென வழக்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய் ஏதா யினுமெனக் கோதா துளதோ? 10. பளிங்கு பழித்த நெஞ்சாய் உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன்: 15. திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிய போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்து போய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி நாடி நாடிப் பாடியும் வராது 20. வாடி வாயது மூடி, மெளனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம் பினை! நெஞ்சில் o, இந்த வண்ணமுடைய கிளி 2. வேம்பு 3. தேவன் (ஈண்டு, சேரன்) 4. பனைமரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/54&oldid=856778" இலிருந்து மீள்விக்கப்பட்டது