65 யில் நொச்சி ஊரணி அருகே இருந்த சமஸ்தான கட்டிடத் தையும் பூரீ சிருங்கேரிடமடத்தின் கிளையொன்றை - - தொடக்குவதற்காக அளித்தார். சமயப் பணிகளில் முழுமையான முனைப்புடன் ஈடு பட்டு இருந்த மன்னருக்கு ஏற்பட்ட இடர்ப்பாடுகளி னால் அவர் சோர்வுறவில்லை யென்றாலும் அவைகளை ஒரளவு குறைத்துக்கொண்டு தமிழ்மொழியின் பால் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். சைவ இலக்கியங் களின் பால் கொண்ட பற்று ஒரு காரணமாக, இருந் தாலும் அவரது உடன்பிறவாத தமையனார் பாண்டித் துரைத் தேவர், இந்த மாற்றத்திற்கு முழுக்காரினமாக இருந்தார் பாஸ்கர சேதுபதி மன்னரது ன் விட்ட துமையனார்.அவர். மான் றாலும் உடன் பிறந்தவர்களைப் போன்று உள்ளத்தால்-உணர்வால் இருவரும் ஒன்று பட்டவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர வர்கள் மதுரையில் இருந்த பொழுது, திருக்குறள் ஒன்று பற்றிய_அரியான_விளுக்கம் பெற திருக்குறள் நூலைப் பார்க்க விரும்பினார். மதுரை நகரில் பலரிடம் கேட்டுப் பார்த்ததில் திருக்குறள் நூல் கிடைக்கவில்லை தேவரவர்கள் மிகுந்த மன வேதனையும் றார்கள். கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தமிழாய்ந்த நான்மாடக் கூடலில் நாளும் தமிழ் மறையாகப் போற்றப்படும் திருக்குறள் இல்லை யென்றால் பிற நூல்களைப் பற்றி எப்படி எண்ணிப் பார்ப்பது? இயலாத ஒன்று! இவ்வாறு தேவர் அவர்களின் சிந்தனை அமைதி யற்றுச் சிறகடித்தது, ஏற்கனவே அவர் இராமநாத புரத்தில் நிறுவியிருந்த தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்பினை மதுரையிலும் நிறுவி-மான் புற்ற தமிழை தழைக்கச் செய்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். இதனை அறிந்த மன்னர் தமது விருப்பமும் அதுவெனக் கூறி ஆதரவு நல்கினர். 1901 ம் வருடம் மே திங்களில் 31. எஸ். எம். கமால் இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984) பக்கம் 206
பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை