பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ - 1ой சுயமரியாதையை விட்டுக்கொடுக்கலாம். அதனல் வெளி யுலகத்தில் அவனுடைய மதிப்பு உயரும் என்ருல் அந்தஸ்து பெருகும் என்ருல், கெளரவம் வளர வாய்ப்பு ஏற்படு மென்ருல், அவன் தனது சுயமரியாதையை இழக்கத் தயங்கக் கூடாது. அப்படி இல்லாமல், எனது தன்மானம்தான் பெரிசு-எனக்கு தானும் என் கருத்துமே முக்கியம்-என்று ஒருவன் அடம்பிடிப்பானேயாளுல், அவன் உருப்பட மாட்டான், அதுமட்டுமல்ல, அவனைப் போன்ற மடையின்வாழும் வகை தெரியாத மடச்சாம்பிராணி-கிடையாது என்றே சொல்வேன். நீ என்ன சொல்றே?" என்று மாதவனை நோக்கினர். . உமக்குப் பிரசங்கம் பண்ணவேணும் என்ற ஆசை இருக் கிறது: அதற்காக முயற்சி செய்கிறீர் போலும்' என்று சொல்லத் துடித்தது அவன் மனம். எனினும், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சரியான யுகதர்மம் இது தான் என்றது.அவன் நாக்கு. - பெரியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. நான் பல் விஷயங்களையும் பற்றி ஆராய்ந்து கண்ட அபிப்பிராயங் களை எல்லாம் ஒரு புத்தகமாக்க எண்ணியிருக்கிறேன். என் பெயரை நிலைநாட்டக்கூடிய மாபெரும் நூலாக-மானு: மென்ட்டல் ஒர்க் ஆக-விளங்கும் அது எந்த விஷயத்தையும் அல்பம் என்று நான் ஒதுக்கி விடுவதில்லை. சிறு விஷயத்திலே கூடப் பெரிய பெரிய உண்மைகள் வெளிப்படலாம் என்ருர். ஆமாம். வாஸ்தவம்தான்’ என்று தலையாட்டினன் மாதவன். - - 'தின்பண்டங்களைப் பற்றி நீ எண்ணிப் பார்த்தது உண்டா? என்று கேட்ட பவானந்தம் அவன் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. சுவையான பேச்சை ஆரம்பித்தார். பாக்கப்போனுல் முக்கால்வாசி தின்பண்டங்கள்-தமிழ் நாட்டின் வீடுகளிலும் ஒட்டல்களிலும் தயாரிக்கப்படுகிறவை த்ான்-தமிழ் நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. அவை வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்தவை. இனிப்புப்