பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 5 வீணுகக் கவலைப்படுவது கிடையாது. ஆகவே மற்றவர் அபிப்பிராயங்களை அலட்சியமாக ஒதுக்கிவிட்டாள். பிறகு சீக்கிரமே பாவாடை ஆசை சுப்பிரமணியன விட்டுவிட்டது. என்ன இருந்தாலும் ஸாரி கட்றதிலே உள்ள அழகு வேறே எந்த டிரஸிலும் இல்லை என்று கண்டு பிடித்துவிட்டான் அவன். அதனால் ரகம் ரகமான சேலைகளே வாங்கிக் குவித்தான். வந்த புதுசில் சிறிது பயந்து பணிவாக நடந்த சுந்தரம் புதுமைக் கூச்சம் விலகியதும், கணவன் சுபாவத்தைப் புரிந்து கொண்டதும், தெம்பாகத் திரிந்தாள். தான் எனும் அகந்தை அவளிடம் அதிகரித்தது. கணவன் குறை கூறவில்லை. ஆனால், பக்கத்து வீட்டுப் பெரியம்மாள்கள் முனகினர்: கண்ணை உருட்டி முழிக்கறது. லேயே பெண்டாட்டியை ஆட்டிவைப்பானே; அந்த வீட்டிலே தான் பொம்பளை சரியாக் குடித்தனம் நடத்திமுடியும். கல்யாணமான புதுசிலே பெண்டாட்டியாத்தா பெரியாத் தான்னு பல்லை இளிச்சிட்டு, பிறகு அவள் மிஞ்சிப்போன பிறகு நாயே, பேயேன்னு வையிறதும் அடிக்கிறதும் மிதிக் கிறது.மாகப் படுத்துகிறவன் எங்கே உருப்படுவான்? ஆரம்' பத்திலிருந்தே ஒரே சீராக நடந்தால்தான் அவளும் அடக்க ஒடுக்கமா இருப்பாள்...” "அனுபவம்” போதனைகள் புரிய முன்வந்து என்ன செய்ய? சுப்பிரமணியன் தன் இயல்புப்படி செயல்புரிந்தான். சுந்தரத்தின் வாழ்க்கை சுதந்திரப் பாதையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அரைகுறை நாகரிகமாக இருந்த ஆசை மனேவியை முற்றிய நாகரிகமாக மாற்றியே திருவது என முடிவு செய் திருந்தான் சுப்பிரமணியன். அவளுடைய தமிழறிவு வளர்ச்சி பெறுவதோடு, அவளுக்கு ஆங்கில ஞானமும் வந்து சேர வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். ஆகவே, சுந்தரம் தினசரி, ஒரு டீச்சரம்மா வீடு தேடிப்போய், பிரைவேட் கற்று வந்தாள்.