பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翠45 போயிருக்கக்கூடாதா? நீங்க ள் உயர்வு அடையாமல் கஷ்டப்பட்டுக் கேவலநிலை அடைந்திருந்தால் கூட, நானும் உங்களோடு வாழ்ந்து, உங்களோடு மகிழ்வுடன் சாக முன் வந்திருப்பேன். மணமான நான் இப்படி எழுதக் கூடாது. தான். ஆனல் என் வாழ்க்கையிலே நான் என்ன சுகத்தைக் கண்டுவிட்டேன்? சொத்து இருக்கிறது, வீடு வாசல், பால் மாடுகள் எதற்கும் குறைவில்லை. குழந்தைகளும் இருக் கின்றன. வாஸ்தவம். இருந்தாலும் என் கணவரின் உள்ளத் தில் மகிழ்ச்சி இல்லை. அதனுல் அவர் குடும்பத்தையும் நாச மாக்கிவிட்டார். அவருள் சந்தேக விஷப்பூச்சி அரித்துக் கொண்டே இருக்கிறது. அதனுல் அவர் என்னைக் கொல்லா மல் கொன்று சித்திரவதை செய்து வருகிரு.ர். ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? ஆரம்பத்தில் சில மாதங்கள் புது மோகம். வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்தது. பிறகு யாரோ என்னேயும் எனது அத்தை மகனையும் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிருச்கள். பிறகு அ ந் த அத்தை பிள்ளை சினிமாவில் நடித்துப் புகழ்பெற ஆரம்பிக்கவும், எங்கள் வீட்டில் சனி புகுந்துவிட்டது. என் கணவரைப் போன்ற சந்தேகப் பிராணி வேறு யாராவது இருப்பார் களோ என்னவோ தெரியாது. இயல்பாகவே சந்தேகம் கொண்டு என்னேத் துன்பப்படுத்தி வந்தவருக்கு ஒரு பிடி கிடைத்துவிட்டது. பட்டணத்துத் தெருவில் நீங்கள் மாமாவுடன் சண்டை பிடித்தீர்களே, அன்று நானும் என் கணவரும் உங்கள் முன்னல் வராமல் இருந்திருக்கக்கூடாதா என நான் பிறகு பல தடவைகள் எண்ணியது உண்டு. அவரும் நானும் ஒரு கடையில் நின் ருேம். கொஞ்சநேரம் கழித்து வெளியே வந்த போது அப்பாவைக் காணுேம். அங்குமிங்கும் நான் தேடி னேன். கும்பலும் கூச்சலும் எங்களைக் கவர்ந்தன. அருகே வந்து பார்த்தால், அந்த நாடகம்! அதன் முடிவில் நீங்கள் என்னைப் பார்த்துச் சொன்னீர்களே ஒரு பேச்சு அது உங்களுக்கு'எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது! இல்லை, அது விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று நீங்கள்