பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் で認5 அவள் கிளுகிளுச் சிரிப்பு உதிர்த்தாள். நீ என்கிட் ே! ஏன் கேட்கப் போறே? உன்னேயே பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து, சொக்கி மயங்கி, அத்தான்-அத்தான்னு வளைய வளைய வரப்போறவ ஒருத்தி இருக்கத்தானே செய்வா! அவள் என்ன சொன்னலும் கேட்டுக்கிட்டே இருப்பே. அவ எங்கே இருக்கா சேது?’ என்று வாயாடினுள். "இப்ப நீ போறையா என்ன?’ என்று கத்தினுன் அவன். உேஸ்! என்ன நீ?" என்று எச்சரித்துத் தன் கையால், அவன் வாயைப் பொத்திளுள் சுந்தரம். 'மதனி எழுந்திருச் சிடப் போருங்க. இப்படி ஏன் கத்துறே? என்ருள். நான் படிக்கப் போகனும் அம்மா. நேரமாச்சு என்று சொல்லி விட்டு, நிமிர்ந்து, நகர்ந்து அவனை ஒட்டி உரசி நின்ருள். அவனுக்கு அவள் போக்கு சுகமாகவும் இருந்தது; எரிச்ச லூட்டுவதாகவும் இருந்தது. என்னதான் படிக்கிறே நீ?" என்று கேட்டான். r இங்கிலிஷ், தமிழ் எல்லாம்தான் என்று சொன்னவள் அவன் முன் திறந்து கிடந்த பெரிய புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினுள். இது என்ன புத்தகம்! ஒரு படம் கூட இல்லையே! என்று முகம் சுளித்தாள். பிறகு, இது மாதிரி புத்தகத்தை எல்லாம் நான் படிக்க எவ்வளவு நாளாகும்?' என்று கேட்டாள். - 'அஞ்சாறு வருசம் பிடிக்கும்!" - 'ஏயம்மா!' என்று புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, அவனையே பார்த்தபடி நின்ருள். அவன் மூக்கை இரண்டு விரல்களால்பற்றி ஆட்டிவிட்டு, சிரித்தபடியே நடக்கலாஞள். அவனுக்குக் கோபம் வந்தது. அவன் வேகமாக அவள் தலைப் பின்னலைப் பிடித்து இழுத்தான். - அவள் ஸ்லம்மா என்னமா வலிக்கி: என்று வேதனை புற்றவள் போல் நடித்துத் தள்ளாடித் திரும்பி அவன் மடியில் உட்கார்ந்துவிட்டாள்.