பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶需 மன்னிக்கத் தெரியாதவர் சிந்தரத்தை ச ந் தே கி க்க ஆரம்பித்தான் அவள் கன்வன். . அந்தப் பயல் என்னவோ சொல்ருனே? டீச்சர் வீட்டிலே யாரு இருக்கா?’ என்று அவன் அவளிடம் விசாரித்த போது, அவன் கோபத்திலே உளறுகிருன். அதைக் கேட்டுக் கிட்டு நீங்களும். என்று மழுப்பிவிட்டாள். அவன் குணம் அவளுக்குத் தெரியாதா? அவனே எப்படிச் சாந்தப்படுத்தவேண்டும், எவ்வாறு சந்தோஷத்தில் தன்னை மறந்துபோகும்படி பண்ணவேண்டும் என்பதை எல்லாம் அவள் அறியமாட்டாளா என்ன? அக் கலைகள் அனைத்தையும் கையாண்டு அவனைக் கிறங்க வைப்பதில் வெற்றி கண்டாள். மதனி வீட்டுப் பக்கம் அடி எடுத்து வைப்பதை சுந்தரம் விட்டுவிட்டாள். அந்த வீட்டுப் பையன்கள் இரண்டு பேரை யும் பார்த்தாலும் பார்க்காததுபோல் தலைகுனிந்து விலகிச் சென்றுள். தினசரி தவருது டீச்சர் வீட்டுக்குப்போய் வந்து கொண்டுதான் இருந்தாள். ஒரு நாள் அசந்தர்ப்பமாக நிகழ்ந்துவிட்ட சிறு விஷயத்தைக் கணவன் மறந்து போளுன் என்று அவள் கருதினுள், - - அவனும் மறந்துவிடக் கூடியவன்தான். ஆனல் அவனே அப்படி மறக்கும்படி விட்டுவிடக்கூடாது என்று காலம் கருத்தில் கொண்டதுபோல் சந்தர்ப்பங்கள் தோன்றலாயின. ஒரு நாள் சுப்பிரமணியனும் அவனுக்குத் தெரிந்தவர் ஒருவரும் ஒட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து ரோட்டில் நின்ருர்கள். அப்போது ஸ்கூட்டர் ஒன்று வேக மாக வந்து அவர்கள் பக்கத்தில் நின்றது. அதை விட்டிறங்கிய இளைஞன் ஜம்மென்று மிடுக்கு நடை நடந்து ஒட்டலுக்குள் போஞன். - 'இவனைத் தெரியுமா உங்களுக்கு?’ என்று நண்பர் கேட்டார். தெரியாதே. யாரு?" என்று சும்மா கேட்டுவைத்தான் அவன். .