பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 8ፕ கொடுத்து நீர் என்று குறிப்பிட்டதை மாதவன் கவனிக்கத் தவறவில்லை. அவன் மனம் சிரித்தது. "மாணிக்கம்! என்று கூப்பிட்டார் பவானந்தம். வேலைக் காரன் வந்ததும், தோட்டத்து ரூமை இவருக்குக் காட்டு. சாவியை இவரிடமே கொடுத்துவிடு. இவருக்குத் தேவை யானதை எல்லாம் அவ்வப்போது கவனித்துச் செய் என்ருர், பாலச்சந்தர், நீ சாப்பிடப்போகும்போது, உன் ஸாரையும் கூட்டிக்கொண்டு போ. தினம் அப்படியே செய்யலாம் என்று மகனிடம் சொன்னுர். 'ஒ' என்று கூறியவாறே ஒடிப்போளுன் அவன். பாலச்சந்திரன் கெட்ட பையன் என்று சொல்ல முடி யாது. அடம் கொஞ்சம் ஜாஸ்தி. எதுக்கெடுத்தாலும் அழு வான். அது பலவீனத்தாலும், பிறர் தன்னைப் புறக்கணிக் கிருர்கள் என்ற நினைப்பாலும் வந்த சுபாவமாக இருக்கலாம். நீர் கவனித்து அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் என்று கூறி பெரியவர் மாதவனே மாணிக்கத்தோடு அனுப்பிவைத்தார். தோட்டத்தின் ஒரு மூலையில் கார் நிறுத்துமிடமருகே ஷெட் போன்ற ஒரு அறை இருந்தது. அதுவும் முன்பு கார் நிற்குமிடமாகவோ, வண்டி நின்ற இடமாகவோ இருந்திருக்க லாம். விசாலமாகத்தான் இருந்தது. சுவர்களில் இரண்டு அலமாரிகள் கதவுகள் இல்லாமல் காட்சி தந்தன. ஒரு பக்கம் ஒரே ஒரு ஜன்னல் காணப்பட்டது. இது போதும். ரயிலடி யிலும், பார்க் பெஞ்சிலும் படுத்துத் தூங்கி அனுபவம் பெற்றுள்ளவனுக்கு இது பிரமாதம் என்றே சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டான் மாதவன். மாதவனுக்காக ஒரு நாற்காலி, ஒரு மேஜை, நீளமான பெஞ்சு ஒன்று, சாதாரண ஜமுக்காளம், தலையணை, தண்ணின் வைக்க மண் கூஜா, கண்ணுடித் தம்ளர், அரிக்கன் லாந்தர், மண்ணெண்ணெய்ப் புட்டி எல்லாம் ஒழுங்காக வந்து சேர்ந் தன. பரவாயில்லியே! வசதியான ஏற்பாடுதான் என்று மகிழ்த்தது அவன் உள்ளம்.