பக்கம்:மன ஊஞ்சல்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 169 வீட்டிலிருந்து ஒரு செடி கொண்டுவந்து வைத்துவிடு' என்று கூறினாள். இதற்கிடையில் தங்கம் தோட்டத்தில் உலவிக் கொண் டிருந்தபோது அங்கே அண்ணாமலைப் பண்டிதர் வந்து சேர்ந்தார். 'தங்கம், மாளிகை எப்படியிருக்கிறது?’ என்று கேட்டார் பண்டிதர், "அரண்மனை மாதிரியிருக்கிறது! அழகாயிருக்கிறது!’ என்றாள் தங்கம். 'இந்த மாளிகையே உன் சொந்தமாளிகையாயிருந்தால் எப்படியிருக்கும்!" என்று கேட்டார் பண்டிதர். அவர் கேட்பதன் பொருள் புரியாமல் திகைத்து நின்றாள் தங்கம், r -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/179&oldid=854289" இலிருந்து மீள்விக்கப்பட்டது