பக்கம்:மன ஊஞ்சல்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 263 "எங்களுக்கென்ன தெரியும்? நீதான் எங்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும்’ என்று தங்கம் சொன்னாள், 'சூவுக்குப் போகலாமா?’ என்று கேட்டாள் மலர்க் கொடி. 'சூவா? அது என்ன?’ என்று ராதா புரியாமல் கேட்டாள். 'விலங்குக் காட்சி சாலை’ என்று மலர்க்கொடியிட மிருந்து பதில் வந்தது. உடனே தங்கமும் ராதாவும் அங்கே போகலாம் என்று கூறினார்கள். கார் விலங்குக் காட்சி சாலைக்கு வந்து சேர்ந்தது. மூன்று பெண்களும், விலங்குக் காட்சி சாலையில் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். அதில் பாதிப் பொழுது போய் விட்டது. சரி, போதும் வீட்டுக்குப் போகலாம்" என்றாள் தங்கம். "இன்னும் மற்றதெல்லாம் பார்க்க வேண்டாமா?" என்று கேட்டாள் மலர்க்கொடி. 'பார்க்கலாம். போய்ச் சாப்பிட்டு விட்டு வர வேண்டாமா?’ என்று கேட்டாள் ராதா, 'சரி, போவோம் வாருங்கள்’’ என்று சொல்லி மலர்க் கொடி அவர்களை வெளியில் கூட்டி வந்தாள். மறுபடியும் காரில் அவர்கள் ஏறிக் கொண்டதும் அது கிளம்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/273&oldid=854394" இலிருந்து மீள்விக்கப்பட்டது