பக்கம்:மன ஊஞ்சல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மன ஊஞ்சல் 'அம்மா! அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது எப்படி யிருக்கிறது? என்று கேட்டாள் தங்கம். - 'அப்பாவும் பிள்ளையும்போல் இருக்கிறது' என்றாள் மரகத அம்மா. 'இல்லை ஒளியும் இருளும் ஒன்றாக இருப்பதுபோல் இருக்கிறது' என்று சொன்னாள் தங்கம். அதற்கு மரகத அம்மாள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. நடராசன் கயிற்றைத் தளர்த்திப் பிடித்து ஹே! ஹே!" என்று மாடுகளை அதட்டினான். ஜல் ஜல் என்று மணியடிக்க ஜமீந்தார் வீட்டு வில்வண்டி ஒடத் தலைப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/52&oldid=854506" இலிருந்து மீள்விக்கப்பட்டது