பக்கம்:மன ஊஞ்சல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 61 “நாளைக்கு' என்று மேலும் குழைந்து கொண்டே சொன்னான் சுந்தரேசன். "சரி தான் என் நண்பருக்குக்கடிதமெழுதி வைக்கிறேன். நீ நாளை அதை வாங்கிக்கொண்டு போய்வரலாம்' என்றார் பண்டிதர். சுந்தரேசன் அப்போது அவரைப் பார்த்த பார்வையில் நன்றியுணர்ச்சி அப்படியே ததும்பி வழிந்தது என்று சொல்லலாம். ஆனால், மனத்திற்குள்ளே தான் அவரை ஏமாற்றிவிட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/71&oldid=854527" இலிருந்து மீள்விக்கப்பட்டது