இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்புகள்
1900 | : | சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். |
1920 | : | சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். |
1922 | : | 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறைவுற்றனர். இச்சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-1923இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். |
1923-1927 | : | சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். |
1930 | : | மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். |
1931-1932 | : | குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். |
1931-இல் கல்வி மீதானஅக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் 'ஆரம்பாசிரியன்' என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். | ||
1934-1938-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார் | ||
1936 | : | அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். |
1955 | : | 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். |
1961 | : | 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. |
1975-1979 | : | தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். |
1980 | : | 8.5.1980-இல் மறைவுற்றார். |
2001 | : | நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. |