பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரஅரசர்கள் பதின்மரும் அவர்களது உறவுமுறைகளும் தெரிந்துகொள்ள முழுதும் பயன்படுகிறது. இந்தப் பதின்மரின் வரலாற்றை முதலிலும் பின்னர் ஏனைய நூல்களில் காணப்படும் மற்றச் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதையே சேர அரசர்கள், பிற சேர அரசர்கள், அரசப் புலவர்கள் என்னும் தலைப்புகளின் கீழும் காணலாம்.