பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


அரசன் நாடு தலைநகர் போரும் முடிவும்
உதியஞ் சேரல் குட்டநாடு வஞ்சி நாட்டின் பரப்பை விரிவாக்கி னான் முதியரை நண்பராக்கிக் கொண்டான்.
இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் குடநாடு மாந்தை கடம்பறுத்தல், யவனரைக் கைது செய்துகொண்டு வரல், இமயம் வரை வெற்றி.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் குட்டநாடு, வஞ்சி, பூழி நாடு, அயிரை மலை, இருகடலையும் எல்லையாகக் கொண்டது வஞ்சி மழவர்க்கு அடைக்கலம் தந்தான்; உம்பற்காட்டில் ஆட்சியை நிலைநாட்டினான்; அகப்பாக் கோட்டையை அழித்தான்; பரிவேள்வி செய்தான்; சோழ பாண்டியரை வென்றான்.
நார்முடிச் சேரல் குன்ற நாடு, இது முதியர்குடி வழியினர் வாழ்ந்த நாடு நன்னனைக் கொன்று அவன் கைப்பற்றியிருந்த பூழி நாட்டைத் தன்னாட்டுடன் சேர்த்துக் கொண்டான். நெடுமிடல், கொடுமிடல் ஆகியோரைக் கொன்றான். (இது பாண்டியனை வென்றது என்று கருதலாம்).