பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கேமன்: பிறன்மனை நயந்த பேதை

இராசக்கிருக நகரத்தில் பிம்பிசார அரசன் அரசாண்ட காலத்தில், அந்த அரசனுக்குப் பொருள் காப்பாளராக இருந்தவர் பெருஞ் செல்வரான அனாதபிண்டிகர் என்பவர். இவருக்கு அழகில் சிறந்த மருமகன் ஒருவன் இருந்தான். இந்தக் கட்டழகன் பெயர் கேமன் என்பது. கேமன் வாலிப வயது அடைந்து கட்டழகு மிக்க காளையாக விளங்கினான். இவனுடைய உடல் அழகையும் வாலிப வயதின் செவ்வியையும் காணும் மகளிர் இவனைப் பெரிதும் விரும்பினர். கேமனும், ஆண்மகனுக்கு இருக்கவேண்டிய நிறையுடைமை என்னும் மனத்தை அடக்கும் ஆற்றல் இல்லாதவனாகி, பிறன் மனை நயந்து ஒழுக்கந் தவறி நடந்துகொண்டான். ஆகவே, இவனை எல்லோரும் வெறுத் தார்கள்.

ஒரு நாள் இரவு கூடாவெழுக்கத்தின் பொருட்டு நகரத்தில் சுற்றித்திரிந்த கேமன் பின்னிரவில் தன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். காவல் சேவலர் இவனைப் பிடித்துக் கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள். அரசன் இவன் இன்னான் என்பதை அறிந்து, இவனைத் தண்டித்தால் மந்திரியின் மானம் கெடும் என்று கருதி, மன்னித்து விட்டுவிட்டார். ஆனால், கேமன் தன் தீய ஒழுக்கத்தைத் திருத்திக் கொள்வில்லை. பழையபடியே பிறன்மனை நயந்து ஒழுகினான். மீண்டும் ஒருமுறை நகரக் காவலரிடம் சிக்குண்டான். மீண்டும் அரசர், அமைச்சரின் மானத்தைக் கருதி அவனைத் தண்டிக்காமல் விட்டார். கேமன் அப்போதும் திருந்தவில்லை. தனது தீயொழுக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான். மூன்றாந் தடவையும் கேமன் சேவகரால் பிடிக்கப்பட்டான். அரசர் இவன் செயலைக் கண்டு மனம் வருந்தினார். அறிவுரைகளைக் கூறி அவனை மீண்டும் மன்னித்து விட்டார். ஆனால், கேமன் தனது தீயொழுக்கத்தைத் திருத்திக் கொள்ளவில்லை.

தன் மருகனுடைய தீயொழுக்கத்தையும் மூன்று முறை சேவகரிடம் அவன் அகப்பட்டுக் கொண்டதையும் அரசர் தம்பொருட்டு அவனை மூன்று தடவை மன்னித்து விட்டதையும் நகர மக்கள் இவனை இகழ்ந்து