பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

145

தனி பஸ் வண்டி விடுகிறார்கள் என்றால், இங்குள்ள சிற்பக் கலைகளின் சிறப்பையும் அழகையும் விளக்கிக் கூறவேண்டுமோ?

இந்தச் சிறு நூலிலே, நாம் ஆராயப்புகுவது, மகாபலி புரத்திலே இருக்கிற அர்ச்சுனன் தபசு என்று பெயர் வழங்கப்படுகிற ஒரு சிற்பத்தைப் பற்றித் தான். இந்தச் சிற்பம் ஒரு கற்பாறைக் குன்றில் வெகு அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இக் கற்பாறைக் குன்றின் கிழக்குப் பக்கம், நெடுஞ்சுவர்போன்று செங்குத்தாக அமைந்திருக்கிறது. சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள இந்தச் செங்குத்தான பாறையிலே, கைதேர்ந்த சிற்பிகள் பல அழகான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பம், பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவர்ந்து மிகக் கம்பீரமாகவும் அழகாகவும் காணப் படுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டிலே, அதாவது இன்றைக்கு 1300 ஆ ண்டுகளுக்கு முன்னே அமைக்கப்பட்ட இந்தச் சிற்பம், கடற் காற்றினாலும் மழை வெயிலினாலும் தாக்குண்டு சிறிது மழுங்கிவிட்ட போதிலும், இன்னும் இதன் அழகும் கம்பீரமும் குறையாமல் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. (படம் 1 காண்க)

இந்தச் சிற்ப உருவம், அர்ச்சுனன் தபசு என்னும் கதையைக் குறிக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது மகாபாரதத்திலே வன பர்வத்தில் கூறப்படுகிறது, அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையைக் காட்டுகிறது இந்தச் சிற்பக் காட்சி என்று சொல்லுகிறார்கள். 1914-ஆம் ஆண்டில், பிரான்சு தேசத்து அறிஞரான M. Victor Goloubeaw என்பவர், இந்தச் சிற்பக்காட்சியை நேரில் வந்து பார்த்தபோது, இது அர்ச்சுனன் தபசு அல்ல என்றும், இராமாயணம் பாலகாண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை இது காட்டுகிறது என்றும் தமது கருத்தை வெளியிட்டார். அதன் பிறகு இவர் கூறிய கருத்துதான் உண்மை என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

னால், இந்தச் சிற்பக் காட்சியை நேரில்போய் ஊன்றிப் பார்த்துக் கூர்ந்து கவனித்தால், இது அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையும் அல்ல, பகீதரன் தபசு செய்து கங்கையைப் பூலோகத்துக்குக் கொண்டு வந்த கதையும் அல்ல என்று தெரிய வருகிறது. ஏனென்றால் இதில் காணப்படும் சிற்ப உருவங்களுக்கும் இக் கதைகளுக்கும் பொருத்தம் காணப்படவில்லை. இந்தச் சிற்பத்தில், ஒற்றைக் காலில்