பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

193

கி. பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தண்டி என்னும் ஆசிரியர், தாம் எழுதிய அவந்தி சுந்தரி கதை என்னும் வடமொழி நூலில் லலிதாலயர் என்னும் சிற்பக் கலைஞரைக் குறிப்பிடுகிறார். தண்டி ஆசிரியர் காலத்தில், லலிதாலயர் மாமல்ல புரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார் என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத் தமிழில் எழுதினார் 6 தண்டியாசிரியர் கூறுகிறார்.

என்றும்

இரண்டாம் விக்கிரமாதித்யன் (733-745), காஞ்சீபுரத்தை வென்ற பிறகு, அந்நகரிலிருந்த குண்டன் என்னும் சிற்பியை அழைத்துக் கொண்டு போய், அச்சிற்பியைக் கொண்டு பட்டடக்கல் என்னும் ஊரில் ஒரு கோயிலைக் கட்டினான். இக் கோயில் இப்போது விரூபாக்ஷ ஈசுவரர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இந்த அரசன், இச்சிற்பக் கலைஞருக்கு திரிபுவனாசார்யர் என்னும் சிறப்புப் பெயரை வழங்கினான். இந்தச் சிற்பிக்கு அநிவாரி தாசாரியார் என்னும் பெயரும் உண்டு.

முதலாங்குலோத்துங்க சோழன் காலத்தில், புரிசையில் திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பாசாரியின் பெயர், சந்திரசேகரன் ரவி என்னும் சோழேந்திர சிம்ம ஆசாரி என்பது.

19

20

திருவொற்றியூர் மூலக்கோயில், இராஜேந்திர சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய சிற்பியின் பெயர் வீரசோழ தச்சன் ஏன்னும் சிறப்புப் பெயருடைய ரவி என்பவர்.2 சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக் கட்டிய சிற்பியர் உருவங்களும் பெயர்களும் வடக்குக் கோபுரத்து உள் சுவரில் எழுதப்பட்டுள்ளன. அப் பெயர்களாவன:- விருத்தகிரியில் கேசவப் பெருமாள், அவர் மகன் விசு முத்து, திருப்பிறைக் கோடை ஆசாரி திருமருங்கன் அவருடைய தம்பி காரணாச்சாரி...........................