பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

“வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லனாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறைகூவி உடற்கரித் தெழுந்து அவனைச் சேர்ந்த அளவிலே சடங்காகப் பிடித்து உயிர் போக நெரித்துத் தொலைத்த மல்லாடல் என்று இதற்கு அடியார்க்கு நல்லார் விளக்கங்கூறுகிறார்.

மல்லாடல் ஐந்து உறுப்புக்களையுடையது.

துடியாடல் : முருகனுடன் போர்செய்த சூரபதுமன் கடலிலே சென்று மாயமாக மாமரம் ஆகி நின்றபோது, முருகன் அவனுடைய வஞ்சத்தை யறிந்து போர்செய்து வென்று, அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி (உடுக்கை) கொட்டியாடிய கூத்து இது.

66

“மாக்கடல் நடுவண்

நீர்த்திரை யரங்கத்து நிகர்த்துமுன் நின்ற சூர்த்திறங் கடந்தோன் ஆடியதுடி

என்று இக்கூத்தைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

“கரிய கடலின் நடுவு நின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன், அக்கடல் நடுவண் திரையே யரங்கமாக நின்று துடி கொட்டி யாடிய துடிக்கூத்து அடியார்க்கு நல்லார் இதற்கு உரை எழுதியுள்ளார்.

என்று

கடையக்கூத்து : வாணணுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப்புற வயலில் இந்திரனுடைய மனைவியாகிய அயிராணி, உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து இது.

66

வயலுழை நின்று வடக்கு வாயிலுள் அயிராணி மடந்தை யாடிய கடையம்

என்று இதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

வாணனுடைய பெரிய நகரின் வடக்கு வாயிற் கண் உளதாகிய வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடிய கடையம் என்னும் ஆடல்” என்பது இதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் உரை. இந்தக் கூத்துக்கு ஆறு உறுப்புக்கள் உண்டு.

பேடாடல் : பேடு அல்லது பேடாடல் என்பது, காமன் சிறை மீட்பதற்காக

தன்னுடைய

மகனான அநிருத்தனைச்