பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இறைவன்

“வண்ணமலர்ச் சரங்கோத்து

மதனவேள் மிகவெய்யக்

கண்ணளவோர் புலனல்லாக்

கனல்விழியால் எரித்தனையால்

எண்ணிறந்த தேவர்களும்

இருடிகளும் எழுந்தோட ஒண்ணுதலாள் பாகங்கொண்

டொருதனியே யிருந்தனையே.

திங்கள்

66

‘குரைகடல் மதிக்கு மதலையை

குறுமுய லொளிக்கு மரணினை

இரவிரு ளகற்றும் நிலவினை

யிறையவன் முடித்த அணையினை

கரியவன் மனத்தி னுதித்தனை

கயிரவ மலர்த்து மவுணனை

பரவுநர் தமக்கு நினதிரு

பதமலர் தபுக்க வினையையே.

பண்-கெளசிகம்.

தாளம்-இரண்டொத்துடைத் தடாரம்.

இனி இந்த ஆடல்கள் ஒவ்வொன்றையும் விளக்குவோம்.

1. அல்லியம்: இது, கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததைக்

காட்டும் ஆடல்.

66

“கஞ்சன் வஞ்சகங் கடத்தற் காக

66

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

அல்லியத் தொகுதி:"24

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி யென்னுங் கூத்து.” என்பது அடியார்க்கு நல்லார்

உரை.

இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புக்கள் உண்டு.