பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றிய இளங்கோவடிகளின் தமயனான சேரன் செங்குட்டுவன், வஞ்சிமாநகரத்திலே ஆடகமாடம் என்னும் அரண்மனையின் நிலமுற்றத்திலே மாலை நேரத்திலே தன்னுடைய தேவியோடு வீற்றிருந்தான். அவ்வமயம், கூத்தச் சாக்கையன் என்னும் நாடகக் கலைஞன், தன் மனைவியுடன் வந்து அரசனை வணங்கி, இருவரும் சிவபெருமான் உமையவள் போன்று வேடம் புனைந்து இந்தக் கொட்டிச் சேதம் என்னும் ஆடலை ஆடிக் காட்டினான். அதனைச் செங்குட்டுவ மன்னன் தேவியுடன் கண்டு மகிழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

66

'திருநிலைச் சேவடிச் சிலம்பு புலம்பவும்

பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை யசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்

பார்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.

என்பது அப்பகுதி.

ஆடல்.

9927

3. குடைக் கூத்து: இது, முருகன் அவுணரை வென்று ஆடிய

“படை வீழ்த்தவுணர் பையுள் எய்தக்

குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடை,

என்பது சிலப்பதிகாரம்.28

66

'அவுணர் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்டு வருத்த முற்றவளவிலே, முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்றாடிய குடைக் கூத்து.” என்பது அடியார்க்கு நல்லார் உரை.

இந்தக் கூத்துக்கு நான்கு உறுப்புகள் உண்டு.

4. குடக் கூத்து. தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் என்னும் அவுணன் சிறை வைத்தபோது அவனை சிறை மீட்பதற்