பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் - - 99

அதன் பிறகு காஞ்சனமாலை என்பவள் வந்து பந்துகளை எடுத்து ஆடினாள். அவள்,

"பிடித்த பூம்பந் தடித்து விசும்பேற்றியும்

அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும்

குழல்மேல் வந்தவை குவிவிரல் கொளுத்தியும்

நிழல்மணி மேகலை நேர்முகத் தடித்தும் கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும் உண்ணின்று திருத்தியும் விண்ணுறச் செலுத்தியும் வேயிருந் தடந்தோள் வெள்வளை ஆர்ப்ப

ஆயிரத் தைந்நூ றடித்தவள் அகன்றாள்”.

அதன் பிறகு, அயிராபதி என்பவள் வந்து ஆடினாள்.

66

“நாற்றிசைப் பக்கமும் நான்கு கோணமும்

காற்றினும் கடிதாக் கலந்தனள் ஆகி அடித்தகைத் தட்டியும் குதித்துமுன் புரியா அகங்கை ஒட்டியும் புறங்கையில் புகுத்தியும் தோள்மேல் பாய்ச்சியும் மேல்மேல் சுழன்றும் கூன்மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் வாக்குறப் பாடியும் மேற்படக் கிடத்தியும் நோக்குநர் மகிழப் பூக்குழல் முடித்தும் பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும் மற்றது புறங்கையில் தட்டினள் எற்றியும்’

பந்தடித்து இரண்டாயிரம் கை கணக்கெடுத்தாள். அப்போது அங்கிருந்தோர் எல்லோரும் அவளைப் புகழ்ந்து மெச்சினார்கள். அதன் பிறகு, விச்சுவலேகை என் பவள், ‘நான் இருக்க அவளைப் புகழ்கிறீர்களே, இதோ பாருங்கள்' என்று கூறிப் பந்தடிக்கத் தொடங்கினாள். அவள்,

66

'கருவிக் கோல்நனி கைப்பற் றினளாய் முரியுங் காலைத் தெரிய மற்றதில்

தட்டினள் ஒன்றென் றுற்றனள் எழுப்பிப் பத்தியில் குதித்துப் பறப்பனள் ஆகியும் வாங்குபு கொண்டு வானவில் போல நீங்கிப் புருவ நெரிவுடன் எற்றியும்