தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்
சாசனச் செய்யுள்
47
ஸ்வஸ்திஸ்ரீ. சகலபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ கோப்பெருஞ் சிங்கன் சோழனைத் தெள்ளாற்றில் வென்று பரிச்சின்ன முங் கொண்டு சோழனைச் சிறையிட்டுவைத்து சோணாடு கொண்ட அழகிய சீயன். பொன்னி நாடனு முரிமையும் அமைச்சரு
மிருப்பதுன் சிறைக்கோட்டம் பொருப் பிரண்டென வளர்ந்த தோள் வலியினாற் கொண்டு சோணாடு கன்னி காவிரி பகீரதி நின்பிரியா தெண்டுறை வாவி காவல் மன்னவர் திரையுட னுணங்குவ
துன்பெருந் திருவாசல்
வென்னிடாத போர்க் கன்னடர் வென்னிடப்
பொருததுன் பெருஞ்சேனை விளங்கு செம்பொனி னம்பலக் கூத்துநீ
விரும்பிய தேவாரம்
பின்னி காவல அவனி நாராயண
பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவகோப் பெருஞ்சிங்க நின்
பெருமை யார் புகழ்வாரேய்.
திரையிட் டிருமின்கள் தெவ்வேந்தர் செம்பொன்
திரையிடாப் பூம்புகார்ச் சோழன் - சிறைகிடந்த
1
கோட்டந்தனை நினைமின் கோப்பெருஞ்சிங்கன் கமல
நாட்டங் கடைசிவந்த நாள்.
2
மீளிவன் கொண்ட விடைவேந்தர் மார்பினும்
தோளினுந் தீட்டிய தொண்டை மன்னவர் வாளில் வென்றிடு சிறைவளவன் தூங்கிய நாளினும் பெரியதின் னாளெனப் புலம்புமே.
அறைகடலி னிசையுடனே யண்டர் வேயினாம்
பல்லிசை செவிகவர அந்திமலை நிறைமடியி னிலவென்னு நெருப்புப் பட்டால் நீரிலை நின்றாற்றுவளோ நிருபதுங்கா
3