மறைந்துபோன தமிழ் நூல்கள்
பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்.
33
குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று
விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித்
நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார்
துளங்கினவே தோற்றந் தொலைந்து.
34
முகிற்றரண மென்னு முற்குருமுப் போற்றோன்றக்
கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - புற்றிழந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல்
வேகக் குழாக்களிற்று வேந்து.
35
பொருசின மாறாப் புலிப்போத் துறையும்
அருவரை கண்டார்போ லஞ்சி - ஒருவருஞ்
/ 83
27
28
29
செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன்
எல்லார்க்கு மெல்லாங் கொடுத்து. 36
30
மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந்
தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெரிய விட்ட வகை.
37
தாக்கற்குப் பேருந்த தகர்போல் மதிலகத் தூக்க முடையா ரொதுங்கியுங் - கார்க்கீண் டிடிபுறப் பட்டாங் கெதிறேற்றார் மாற்றார் அடிப்புறத் தீடு மரிது. 38
இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்ன ரிமையாக் கண்கண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.
ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து.
31
32
33
34