பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

ஆண்டு

1831

66

பெயர் முதலியன

117

“தமிழ்ப் பத்திரிகை ? திங்கள் இதழ். கிறிஸ்து சமயப் பத்திரிகை "மதராஸ் ரிலிஜியஸ் டிராக்ட் ஸொஸைடி” யால் சென்னையில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துமத சம்மந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. தமிழில் முதல் முதல் வெளிவந்த பத்திரிகை இதுவே. அடிக்கடி ஆசிரியர்கள் மாறிய படியால்

வெளிவருவதில் தவக்கம் ஏற்பட்டது.

1840 பாலதீபிகை: சிறுவர்களுக்கான பத்திரிகை. மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. 1852 வரையில் நடந்தது.

1740 Missionay Gleance இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. பல ஆண்டுகள் நடைபெற்றது.

1840 Friendly Instructor: இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை பாளையங் கோட்டையிலிருந்து வெளிவந்தது.

1840 தற்போதகம்: பாளையங்கோட்டை சர்ச்சு மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற்றது. 1841 ஜனசிநேகன்: சென்னையிலிருந்து வெளிவந்து. மாதம் இருமுறை

1841 சுவிசேஷ பிரபாவ விளக்கம்: நாகர் கோவிலிலிருந்து வெளி

வந்தது.

1842 The Aurora: மாதம் இரு முறை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. 1845 உதய தாரகை: இலக்கியம், கல்வி, சமயம் முதலியவற்றைப் பற்றிய கட்டுரைகள் இதில் வெளிவந்தன. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டன.

1849 சிறுபிள்ளையின் தேசத் தோழன்: மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது.