தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
121
1879 நடுத்தர உயர்தர பள்ளி நண்பன்: இதன் ஆசிரியர் அண்ணாதுரை ஐயர். சென்னை வித்தியா வர்த்தனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.
1880
1881
சுதேசமித்திரன். இது இன்றும் நடைபெறுகிறது. தினசரிப் பத்திரிகை.
கலாநிதி: பகடால S. P. நரசிம்மலு நாயுடு அவர்களால் சேலத்தில் நடத்தப்பட்டது. இவரே, சுதேசாபிமானி என்னும் பத்திரிகையை இந்த ஆண்டுக்கு முன்பு நடத்தினார். எத்தனை ஆண்டு என்பது தெரியவில்லை.
1882 தத்துவ விவேசினி: சென்னையிலிருந்து வெளிவந்தது. தமிழ்ப் புரொபஸர் பு. முனிசாமி நாயகர் இதன் ஆசிரியர்.
1882 சத்திய வேதக்கொடி: திங்கள் இதழ் மாசிலாமணி என்பவ ரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப்பட்டது.
1883 சுகுணபோதினி: திங்களுக்கு இருமுறை சென்னையில் அச் சிடப்பட்டது. இதன் ஆசிரியர், இ. பாலசுந்தர முதலியார்.
1883 இந்துமத சீர்திருத்தி: பாளையங்கோட்டையிலிருந்து வெளி வந்தது. இதன் ஆசிரியர், கே. ஆறுமுகம் பிள்ளை.
1884 தீர்க்கதரிசன வர்த்தமானி: மூன்று திங்களுக்கு ஒரு முறை மாசிலாமணி என்பவரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப் பட்டது.
1884 சத்திய வேதானுசாரம்: கிறிஸ்துவ மதப் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியர், எம். சி. யோகப்பிள்ளை.
ம
1886 பிரம வித்தியா. திங்கள் இதழ். தமிழ் வடமொழி இரண்டிலும் எழுதப்பட்டது. K. R. சீனிவாச தீக்ஷிதரால் சிதம்பரத்திலி ருந்து இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்களின் பொருளுதவி பெற்று நடந்தது.
1886
கலா தரங்கினி: திங்கள் இதழ். இராஜகோபால செட்டியாரால் சென்னை. சூளை திராவிட ரத்தினாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1889 வரையில் நடந்ததாகத் தெரிகிறது.