54
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16
இவ்வா றேற்படுத்தினதினாலே யெண்கள் ஏக தச ஸ்தானாதி களை முறையே யடைந்து முன்னிழந்த வலியை அடைந்தன.
66
னாலிச்சித்த வொரு தொகையை யெழுதும் போது யாதொரு ஸ்தானத்திற் கெண்ணில்லாம லெழுதும்படி நேரிடுகிறதோ அந்த ஸ்தானத்திற்குப் புள்ளி வடிவு கூட்டியெழுதுக. எப்படியென்றால்.
1210
1205
1035
"இவைகளில் முதற்றொகையில் ஏகஸ்தானத்திலும், இரண்டா வதில் தசஸ்தானத்திலும், மூன்றாவதில் சதஸ்தானத்திலும் எண்ணில்லா மையினாலே புள்ளி கூட்டி எழுதப்பட்டது.
66
'இதில் கணித பரிகர்மத் திலக்கணத்துக்கு உதாரணங் கூறிய விடத்திற் கணிதக்கிரியைகள் செய்வதற்கெல்லாம் விதிகள் விளக்க முற வேற்படுத்திச் சொல்லியிருப்பதனாலே கற்போருக்கு மிகவு மெளிதாயிருக்கும்.
"இந்நூலிற் சொல்லியிருப்பன வெல்லா மிங்கே விவரித்துச் சொல்லிற் பாயிரம் பெருகு மென்றஞ்சிச் சுருக்கிக் கூறப்பட்டது. ஆதலால் அவ்வவ் அதிகாரங் கூறுமிடத்து அதனதன் முறை யெல்லாங் கண்டுணர்க.
وو
16, 17-ஆம் பக்கங்களில் மேலும் அவர் எழுதுவது வருமாறு:-
66
"தமிழ் தேசத்தில் வழங்கப்பட்ட எண்சுவடியில் முக்காலரை முதலானவைகளுக்கு இந்தச் சாஸ்திரத்தி லேற்படுத்தினபடியே பின்னாம்சம் எழுதும் முறை:
இவ்வாறு மேலும் அரைக்காணி. முந்திரி, கீழ் முக்கால், கீழரை, கீழ்க்கால், கீழ்நாலுமா, கீழ் மூன்று வீசம், கீழ் மூன்றுமா, கீழரைக்கால், கீழே இரண்டுமா, கீழ் வீசம், கீழ் ஒருமா, கீழ் முக்காணி, கீழரைமா, கீழ்க்காணி, கீழரைக்காணி, முந்திரி, இம்மி, அதிசாரம் ஆகிய கணக்கு களின் குறியீட்டெழுத்துக்களையும் அவற்றின் விளக்கங்களையும் எழுதியுள்ளார்.
6
ஐரோப்பா நாடுகளில் வழங்கி வந்த கூட்டல் குறி (+), கழித்தல் குறி (-), பெருக்கல் குறி (x), வகுத்தல் குறி (:) முதலிய குறிகளையும் இப்புத்த கத்தில் புதிதாகப் புகுத்தியுள்ளார். இவை பற்றி இந்நூலாசிரியர்