பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

எல்லரி தொடுமின், ஆகுளி தொடுமின் பதலை ஒருகண் பையென இயக்குமின்

இதிலும் பதலை கூறப்படுவது காண்க.

99

-(புறம்: 152: 13-17)

பதலையும் தபலாவும் ஒன்றே. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. தபலாவுக்கு ஒரு பக்கம் மட்டும் தோல் மூடிக் கட்டப் பட்டிருப்பது போலவே பதலையும் ஒரே பக்கம் தோல் மூடிக் கட்டப்பட்டிருந்தது. இதனைப் 'பதலை ஒருகண் பையென இயக்குமின்' என்று கூறப் படுவதிலிருந்து அறியலாம். மேலும் புற நானூற்றுப் பழைய உரையாசிரியர் இதைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். “பதலை என்பது ஒரு தலை முகமுடையதோர் தோற்கருவி” என்று அவ்வுரை யாசிரியர் (புறம்: 103-ஆம் செய்யுள் உரையில்) சந்தேகத்துக்கு இடமில்லாமல் எழுதியிருப்பது காண்க. இவ்வுரையாசிரியரே புறம் 64- ஆம் பாட்டு உரையில், பதலை என்பதற்கு ஒருதலைமாக்கிணை என்று உரை எழுதியிருப்பதையும் நோக்குக. நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும், 'நொடிதரு பாணிய பதலை' (மலைபடுகடாம்-11) என்பதற்கு, “மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய ஒரு கண்மாக்கிணை” என்று உரை எழுதியிருப்பதையும் காண்க.

எனவே, பதலை என்பது ஒரு பக்கத்தில் மட்டும் தோல் போர்க்கப் பட்ட இசைக்கருவி என்பதும் அதைச் சங்க காலத்தில் பாணர்கள் இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்தார்கள் என்பதும் தெரிகின்றன. இந்த இசைக்கருவியும், பிற் காலத்தில் யாழ் வங்கியம் முதலிய இசைக்கருவிகள் மறைந்துவிட்டது போலவே மறைந்துவிட்டது! ஆனால், இதே இசைக் கருவி தபலா என்னும் பெயருடன் வட நாடுகளில் இன்றும் இருந்து வருகிறது. பழைய தமிழ் நாட்டுப் பதலை இப்போது வடநாட்டுத் தபலாவாகக் காட்சியளிக்கிறது.

இதுபோலவே, பெருவங்கியம் என்னும் மூங்கிலினால் செய்யப் பட்டுத் தமிழ்நாட்டில் வழங்கி வந்த இசைக் கருவி இப்போது மறைந்து விட்டது. ஆனாலும் அவ்விசைக்கருவி வட இந்தியாவில் கிராமிய இசைக் கருவியாக இன்றும் இருந்து வழங்கி வருகிறது.

அடிக் குறிப்புகள்

1. இந்தக் கட்டுரை குத்தூசி என்னும் திங்கள் வெளியீட்டில் (ஊசி : 1 குத்து 3. 1962-இல்) வெளிவந்தது.