பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

215

சமூகத்திலேயும் இந்த மாறுதல்கள் விரைவில் ஏற்படும். அப்போது, பழைமையாகப் போற்றிவரும் கலாசாரங்களும் பண்பாடுகளும் மறைந்துபோகும்.

நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழைய கலாசார பண்பாடுகள் பழைய தமிழ்ப் பண்பாடுகளாக இருப்பதனாலே, அவை மறைந்து போவதற்கு முன்பே, தக்க ஆராய்ச்சிக்காரர்கள், அப்பண்பாடுகளை எல்லாம் ஆராய்ந்து புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இதை நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் விரைந்து செய்வார்கள் என நம்புகிறேன்.