பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பௌ. பிக்கு:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

(தனக்குள்) நம்முடைய அதிர்ஷ்டம் நல்ல மதுபானம் கிடைக்கிறது! ஆனால் யாரேனும் பார்த்து விட்டால் என்ன செய்வது?

(அவளிடம்) அம்மணி! அப்படிச் சொல்லாதே. எங்களுக்கு அது தகுந்ததல்ல. (நாக்கைச் சப்பிக் கொள்கிறான்.

தேவ:

காபாலி:

பௌ.பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

தேவ:

போமையா, போம். உமக்கு இவ்வளவு நல்ல, அதிர்ஷ்டம் எப்போ கிடைக்கப்போகிறது.

தேவசோமா! அவருக்கு மனத்தில் ஆசை பொங்கி வாய் ஊறுகிறது. ஆகையால், பேச்சு குழறுகிறது. உங்களுக்கு இன்னும் என்மேல் இரக்கம்

உண்டாகவில்லையா!

எனக்கு இரக்கம் இருந்தால் எப்படி வீதராகனாக14 இருக்க முடியும்?

வீதராகராக இருப்பவர் கோபம் இல்லாதவராகவும் இருக்க வேண்டுமே.

என்னுடைய பொருளைக் கொடுத்துவிட்டால், கோபம் இல்லாதவனாக இருப்பேன்.

உன்னுடைய “பொருள்” என்பதன் பொருள் என்ன? கபால பாத்திரந்தான்.

என்ன! கபாலபாத்திரமா?

66

15

கபால பாத்திரமா” என்று கேட்கிறார் இவர்! இது இவருக்கு இயற்கைதானே. கண்ணுக்குப் புலப்படும் உண்மைப்பொருள்களை மண், விண், கடல், மலை முதலியவற்றை எல்லாம் மாயை என்றும் மித்தை என்றும் கூறியவரின் வழிவந்த மகன் அல்லவா இவர்? ஆகையால், சிறு மண்டையோட்டையும் “இல்லை” என்று சொல்லி மறைக்கமாட்டாரா?

6

இப்படி எல்லாம் நயமாகப்பேசி நல்லவிதமாகக் கேட்டால் கொடுக்கமாட்டார். அவர் கையில் இருக்கிற கபாலபாத்திரத்தைப் பிடுங்கிக்கொண்டு வாருங்கள்.