பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

50

55

60

65

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன்

சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து

போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்

பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.