பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலன்:

நான்காம் அங்கம்

முதற் களம்

இடம் : படை பயில் களம்.

காலம் : காலை.

(பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.)

(நேரிசை ஆசிரியப்பா)

பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது...

(தனிமொழி)

(பெருமூச்செறிந்து)

5

LO

கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின்

எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்

ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே ! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள் இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை 10 வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப்

படியே பரவுமே படியெலாம் துயரம் !...

என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி

(சற்று நிற்க)

-

காண் தகும் காணத்தக்க, மதிப்பார் – கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய-சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும்.