பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் களம்

இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல்.

(ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க)

(நேரிசை ஆசிரியப்பா)

முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ

2-ம் சேவ:

ஆறுதல் கூறுவம்?

கூறலும் வீணே!

3-ம் சேவ:

4-ம் சேவ:

3-ம் சேவ:

பெருத்த துயரிற் பேசும் தேற்றம்

நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.

பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?

நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.

மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய்.

முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?

மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள்

4-ம் சேவ:

2-ம் சேவ:

3-ம் சேவ:

ஆயினும்,

...

மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ!

2-ம் சேவ:

நாரா யணரே நன்மதி உடையோர்.

தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள்.