பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
253
ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன்.
(மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர)
போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ
(நாராயணன் வர)
நாரா:
40
எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்!
ஜீவ:
குழந்தாய்! குழந்தாய்!...
(விழுந்து மூர்ச்சிக்க)
சேவகர்: நாரா:
கொற்றவா! கொற்றவா!
பேசன்மின்!
(அரசனை மடியில் தாங்கி)
முதற் சேவ:
பேசன்மின்!
நாரா:
வீசுமின்! அகன்மின்!
முதற் சேவ:
வெளியே!
4-ம் சேவ:
பனிநீர்...
நாரா:
ஜீவ:
நாரா: ஜீவ:
45
தெளிநீ சிறிது.
குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!
(எழுந்து சோர்வாயிருக்க)
இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே!
செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்
பொலியாது- விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல" என்பது பழமொழி. செருமுகம் போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று.