292
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்?
மன்னவ!
265 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? 270 வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! 275 முருகனும் நாரா யணனும் மொழிந்த
அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். 280 காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை?
சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே.
285 அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன்.
கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு
கருநா - கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் - கூட்டங்கள். காண்டும் பார்ப்போம்
-
284 - 285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு சொல்லப்படும்.